மூலதனம்
சரக்கும் -பணமும் என்ற முதல் அத்தியாயத்தில் சரக்கின் இரு காரணிகள் அதாவது பயன் -மதிப்பு பரிவர்த்தனை -மதிப்பு இன்னும் கறாராக சொல்வது என்றால் மதிப்பின் சாரமும் -மதிப்பின் பருமனும் இவற்றை புரிந்து கொள்ள நாம் வாழும் இந்த முதலாளித்துவ உற்பத்தி நிகழும் சமுகத்தில் அனைத்து செல்வங்களும் சரக்குகளின் வடிவில் தான் காட்சி அளிக்கிறது. எனவே நமது ஆராய்ச்சி அதில் குறிப்பாக தனிச் சரக்கை எடுத்து பகுப்பாய்வு செய்வது முதலில் சரக்கு என்பது நமக்கு வெளியே இருக்கும் ஒரு பொருள் அது அதன் குணங்களை கொண்டு ஏதேனும் ஒரு விதத்தில் மனிதர்களின் தேவையை நிறைவு செய்கிறது அது மனதின் இச்சை ஆனாலும் உடலில் பசியானாலும் சரிதான் எல்லாம் ஒன்றுதான் இந்த தேவைகளை சரக்கு நேரடியாக வாழ்வின் உணவு,உடை இன்னும் பிற இந்த வழியில் அது வாழ்வு சாதனமான முறையில் அல்லது இந்த வாழ்வு சாதனங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி சாதனங்களாக எந்த முறையில் சரக்கு பயன்படுகிறது என்பது நமக்கு தற்போது தேவையில்லை இரும்பு, காகிதம் இவற்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் இவை இரண்டும் ஏதேனும் ஒரு வழியில் பயனுள்ள பண்டங்கள் அதே சமயம் பண்பு, அளவு வழியில் பார்த்தால் இரண்டும் ...