மார்க்ஸ்
மனித வாழ்வின் ஒட்டுமொத்த ரகசியம் ஒரு புறம் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சந்தோஷமும் செல்வமும் மறுபுறம் பசியும் கசப்பும் கண்ணீரும் உலகின் அனைத்தையும் விளக்க தத்துவ ஞானிகள் இரு கூறுகளாக மனிதன் கடவுளின் படைப்பு என்றது ஒரு ஞானியர் கூட்டம் கடவுளின் படைப்பு என்றால் ஏன் இந்த ஏற்ற தாழ்வு என்றது மறு கூட்டம் காரணத்தை கண்டறிய பலர் கற்பனை கதைகளை சிருஷ்டித்தனர் எல்லாம் தலைவிதி முன் ஜென்ம வினை என்றனர் இவர்கள் சன்டையில் வாழ்வுக்கும் பசிக்கும் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்து கற்பனையில் கவலைகள் போக்க மருந்துகள் தேடினர் வந்தார் மார்க்ஸ் இவர்கள் சண்டையில் இணைப்பு சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தார் இவர் காலத்தில் சக அறிவாளிகள் கூடாரம் கண்டுபிடிப்பு இவர் அந்த சிக்கல்களை புரிந்து கொள்ள உதவியது முதல் கண்டுபிடிப்பு மனிதன் கடவுளின் படைப்பு இல்லை பரிணாம வளர்ச்சியின் காரணமாக வந்தவன் இரண்டாம் கண்டுபிடிப்பு ஆற்றலை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது மூன்றாவது கண்டுபிடிப்பு மனித,தாவர உயிர்கள் ஏன் உலகின் அனைத்தும் அணுக்களால் ஆனது அணைத்தையும் கற்றார் இவைகளின் இணைப்பை சமுகத்தின் விதியை கண்டுபிடித்தார் பாயர்பக்கின் பொருள் முதல் வாதத்தையும் ஹெகலின் அனைத்தும் இயங்குகிறது என்ற இயங்கியலையும் ஒன்றினைத்து இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை முன் வைத்தார் மனித குலம் கற்பனையில் உருவாக்கி வந்த சொர்க்கத்தை அவர்களின் கால்களை பிடித்து மண்ணுலகில் வைக்க வைத்து சொர்க்கத்தை மண்ணில் உருவாக்கு அது தான் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி என்றார் உடல் ரீதியான பரிணாம வளர்ச்சி சமூக ரீதியான பரிணாம வளர்ச்சியாக பரிணாமம் அடைந்து அதுவே வாழ்வின் இலக்கு என்றார் கனவுகளுக்கு பதில் அறிவியலையும் கண்ணீருக்கு பதில் புரட்சியையும் முன் வைத்தார் அவர் 140 ஆவது நினைவு நாளில் அவரின் அறிவியலையும் புரட்சியையும் அவர் ஏற்றி வைத்த தீப்பந்தத்தை நாமும் ஏந்துவோம் உலகின் அனைத்தும் மக்களுக்கே புரட்சி ஓங்குக புரட்சி வெல்லட்டும்
Comments
Post a Comment